top of page

214. வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே

வல்ல ஆண்டவர் இயேசுவண்டை


வாழ்நாளெல்லாம் வீண்நாளாய்

வருத்தத்தோடே கழிப்பது ஏன்

வந்தவர் பாதம் சரணடைந்தால்

வாழ்வித்து உன்னைச் சேர்த்துக்கொள்வார்

- வருவாய் தருணமிதுவே


கட்டின வீடும் நிலம் பொருளும்

கண்டிடும் உற்றார் உறவினரும்

கூடுவிட்டு உன் ஆவி போனால்

கூட உன்னோடு வருவதில்லை

- வருவாய் தருணமிதுவே


வானத்தின் கீழே பூமிமேலே

வானவர் இயேசு நாமம் அல்லால்

இரட்சிப்படைய வழியில்லையே

இரட்சகர் இயேசு வழி அவரே

- வருவாய் தருணமிதுவே


சத்திய வாக்கை நம்பியே வா 

நித்திய ஜீவன் உனக்களிப்பார் 

உன் பேரை ஜீவ புஸ்தகத்தில் 

உண்மையாய் இன்று எழுதிடுவார்

- வருவாய் தருணமிதுவே

bottom of page