top of page

114. ஏசுவுடன் சுகமாகவே செல்வேன்

ஏசுவுடன் சுகமாகவே செல்வேன்,

எங்கேயும் அவர் என்னை நடத்தட்டும்,

ஏசு இல்லா ஸ்தலம் ஏது வாயினும்,

எச்சந்தோஷமும் பறந்தே போய்விடும்.


எங்கேயும், எங்கேயும் பயம் அறியேன்;

ஏசுவுடன் சுகமாகவே செல்வேன்.


ஏசுவுடன் எங்கேயும் தனித்தல்ல.

என் நன்பர்கள் என்னை

விட்டுப் போனாலும்,

ஏது காட்டில் என்னைக்

கொண்டு போனாலும்;

ஏசுவுடன் எல்லா சந்தோஷமுண்டே.


ஏசுவுடன் எவ்விடமும் தூங்கலாம்.

சாவின் நிழல் என்னை மூடுகையிலும்,

ஏக்கம் நீங்கி எழும்புவேன் நிச்சயம்,

ஏசுவுடன் இன்ப வீட்டில் வாழுவேன்.

bottom of page