top of page

122. ஆ! யெமக்காய் நல்

ஆ! யெமக்காய் நல் ஓய்வு நாளை

அன்பாய் அமைத்தார் என்பரனார்.


பூமியின் சோலையில் 

ஓய்வு கொள்ள

பூலோக மீட்பரைப்

போற்றிக் கொள்ள

- ஆ! யெமக்காய் நல் ஓய்வு நாளை


ஆறுதல் பக்தியும் ஆவி மழை

அன்பையெம்மை நினைத்திடவும்

தேறுதல் கொண்டே ஓய்வு நாளை

திறமாய் நலமாய் ஆசரிப்போம்

- ஆ! யெமக்காய் நல் ஓய்வு நாளை


ஆவியின் பேரருள் வேண்டிடுவோம்;

ஆனந்தம்! பேயினை வென்றிடுவோம்;

சாவை வென்று போனவரைச்

சாற்றிப் போற்றிப் பாடிடுவோம்

- ஆ! யெமக்காய் நல் ஓய்வு நாளை


என்னென்ன சோதனை வந்திடினும்

ஏற்பாய் ஓய்வு காத்திடவும்

மன்னனாம் தேவனின் கட்டளையை மன்னன்

சொற்படி கைக்கொள்ளுவோம்

- ஆ! யெமக்காய் நல் ஓய்வு நாளை


சுவாமி! நின் தாசரை நோக்கிப் பாரும்;

பிள்ளைகளென்றே எண்ணிக் காரும்;

பரலோக ஓய்வில் களி கூர

பரிசுத்த சபையாய்க் காத்துக்கொள்ளும்.

- ஆ! யெமக்காய் நல் ஓய்வு நாளை

bottom of page