top of page

140. மகிழ் கொண்டாடி கெம்பீரி

மகிழ் கொண்டாடி க் கெம்பீரி;

மகத்வக் கீதங்கள் பாடு;

துக்க நினைவை யகற்றித்

தொனியாய்ப் போற்றிப் பாடு

நண்பர் ஒன்றாய்க் கூட நன்மை

செய்த தேவனைத் துதி.

எம்மை அவர் அன்பின் சத்தம்

ஏவிற்றே ஏசு பாதம்.


கெம்பீரி! கெம்பீரி!

பூரித்துக் கொண்டாடியே!

கெம்பீரி! கெம்பீரி!

யூபிலி நாளிலே.


கொடி ஏற்றி சந்தோஷித்துக்

கொண்டாடுவோம் பண்டிகை;

ஓசன்னா! உச்சமாய்ப் பாடி;

உம்மையே வணங்குவோம்;

ரட்சகர் மகிமை சொல்லி

ரட்சை செய்தி கூறுவோம்;

சிந்தையில் மேல் நோக்கி மேலாய்ச்

சிலுவைக் காட்சி சொல்வோம்.


இவ்வருடம் இரக்கங்கள்

இயன்ற பிதாவுக்கு

இங்கு நிற்கும் யாவருமே

ஏற்றுகிறோம் நன்றியை;

இரத்தத்தால் மீட்ட எங்கள்

ரட்சகருக்கு நன்றி;

தேவ ஆவி, ஊதும் எம்மில்

தேவனிடம் சேர்த்திடும்.

bottom of page