top of page
151. யாரினும் மேலான அன்பர்
யாரினும் மேலான அன்பர், மா நேசரே;
தாயை விட நல்ல நண்பர், மா நேசரே;
மற்ற நேசர் விட்டுப் போவார்
நேசித்தாலும் கோபம் கொள்வார்
இயேசுவோ என்றென்றும் விடார், மா நேசரே!
என்னைத்தேடி சுத்தஞ்செய்தார, மா நேசரே;
பற்றிக்கொண்ட என்னை விடார், மா நேசரே!
இன்றும் என்றும் பாதுகாப்பார்,
பற்றினோரை மீட்டுக்கொள்வார்,
துன்ப நாளில் தேற்றல் செய்வார், மா நேசரே!
நெஞ்சமே நீ தியானம் பண்ணு, மா நேசரை;
என்றுமே விடாமல் எண்ணு, மா நேசரை;
எந்தத் துன்பம் வந்தும் நில்லு;
நேரே மோட்ச பாதைச் செல்லு,
இயேசுவாலே யாவும் வெல்லு, மா நேசரே!
என்றென்றைக்கும் கீர்த்தி சொல்வோம், மாநேசரே;
சோர்வுற்றாலும் வீரங் கொள்வோம் , மா நேசரே;
கொண்ட நோக்கம் சித்தி செய்வார்,
நம்மை அவர் சேர்த்துக்கொள்வார்
நாடும் நம்மை யாவரும் ஈவார் மா நேசரே!
bottom of page