top of page

151. யாரினும் மேலான அன்பர்

யாரினும் மேலான அன்பர், மா நேசரே; 

தாயை விட நல்ல நண்பர், மா நேசரே; 

மற்ற நேசர் விட்டுப் போவார் 

நேசித்தாலும் கோபம் கொள்வார் 

இயேசுவோ என்றென்றும் விடார், மா நேசரே! 


என்னைத்தேடி சுத்தஞ்செய்தார, மா நேசரே; 

பற்றிக்கொண்ட என்னை விடார், மா நேசரே! 

இன்றும் என்றும் பாதுகாப்பார், 

பற்றினோரை மீட்டுக்கொள்வார், 

துன்ப நாளில் தேற்றல் செய்வார், மா நேசரே! 


நெஞ்சமே நீ தியானம் பண்ணு, மா நேசரை; 

என்றுமே விடாமல் எண்ணு, மா நேசரை; 

எந்தத் துன்பம் வந்தும் நில்லு; 

நேரே மோட்ச பாதைச் செல்லு, 

இயேசுவாலே யாவும் வெல்லு, மா நேசரே! 


என்றென்றைக்கும் கீர்த்தி சொல்வோம், மாநேசரே; 

சோர்வுற்றாலும் வீரங் கொள்வோம் , மா நேசரே; 

கொண்ட நோக்கம் சித்தி செய்வார், 

நம்மை அவர் சேர்த்துக்கொள்வார் 

நாடும் நம்மை யாவரும் ஈவார் மா நேசரே!

bottom of page