top of page
153. இதோ மனுஷரின் மத்தியில்
இதோ மனுஷரின் மத்தியில்
தேவாதி தேவனே வாசஞ் செய்கிறாரே!
தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
தம் ஜனத்தாரின் மத்தியிலாம்
தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே
கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே!
- இதோ மனுஷரின் மத்தியில்
தேவ ஆலயமும் அவரே
தூய ஒளி விளக்கும் அவரே
ஜீவனாலே தம் ஜனங்களின் தாகம் தீர்க்கும்
சுத்த ஜீவ நதியும் அவரே!
- இதோ மனுஷரின் மத்தியில்
சீயோனே உன் வாசல்களை
ஜீவ தேவனே நேசிக்கிறார்
சீர் மிகுந்திடுமிச் சுவிசேஷந்தனை
கூறி உயர்த்திடுவோம் உனையே!
- இதோ மனுஷரின் மத்தியில்
முன்னோடியாய் இயேசு பரன்
மூலைக் கல்லாகி சீயோனிலே
வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை
வாஞ்சையோடு நாம் நாடிடுவோம்
- இதோ மனுஷரின் மத்தியில்
bottom of page