top of page

153. இதோ மனுஷரின் மத்தியில்

இதோ மனுஷரின் மத்தியில் 

தேவாதி தேவனே வாசஞ் செய்கிறாரே! 


தேவன் தாபரிக்கும் ஸ்தலமே 

தம் ஜனத்தாரின் மத்தியிலாம் 

தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே 

கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே!

- இதோ மனுஷரின் மத்தியில் 


தேவ ஆலயமும் அவரே 

தூய ஒளி விளக்கும் அவரே 

ஜீவனாலே தம் ஜனங்களின் தாகம் தீர்க்கும் 

சுத்த ஜீவ நதியும் அவரே!

- இதோ மனுஷரின் மத்தியில் 


சீயோனே உன் வாசல்களை 

ஜீவ தேவனே நேசிக்கிறார் 

சீர் மிகுந்திடுமிச் சுவிசேஷந்தனை 

கூறி உயர்த்திடுவோம் உனையே! 

- இதோ மனுஷரின் மத்தியில் 


முன்னோடியாய் இயேசு பரன் 

மூலைக் கல்லாகி சீயோனிலே 

வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை 

வாஞ்சையோடு நாம் நாடிடுவோம்

- இதோ மனுஷரின் மத்தியில் 

bottom of page