top of page

157. எண்ணிடலங்கா ஸ்தோத்திரம்

எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் - தேவா 

என்றென்றும் நான் பாடுவேன் 


இந்நாள் வரை என் வாழ்விலே 

நீர் செய்த நன்மைக்கே 


வானாதி வானங்கள் யாவும் 

அதின் கீழுள்ள ஆகாயமும் 

பூமியில் காண்கின்ற யாவும் 

கர்த்தா உம்மைப் போற்றுமே 

- எண்ணிடலங்கா ஸ்தோத்திரம்


காட்டினில் வாழ்கின்ற யாவும் 

கடும் காற்றும் பனி தூறலும் 

நாட்டினில் வாழ்கின்ற 

யாவும் நாதா உம்மை போற்றுமே  

- எண்ணிடலங்கா ஸ்தோத்திரம்


நீரினில் வாழ்கின்ற யாவும்

இந் நிலத்தின் ஜீவ ராசியும் 

பாரினில் பறக்கின்ற யாவும் 

பரனே உம்மைப் போற்றுமே 

- எண்ணிடலங்கா ஸ்தோத்திரம்

bottom of page