top of page

159. இயேசு மா ராஜர் தாம்

ஏசு மா ராஜர் தாம் இதோ, 

வாசல் அருகே நிற்கிறார் 

நாம் நினையாது வேளையில் 

ராஜா வருவாரே.


வருவார், வருவார் 

ஒருவரும் அறியா நேரம் 

ஏசு ராஜா, மகா ராஜா 

வையகம் வருவாரே


பண்டைத் தீர்க்கர் சொல்லிப்போன 

அடையாளங்கள் பலவும் 

நடைபெறுகின்றன பார் 

இடையறாமலே


நீதி சூரியன் உதிக்க 

நேரம் பிடிக்காது இனி; 

வானம் வெளி வாங்குது பார் 

பார் பார் விடியது 


நித்திரை விட்டெழுந்து  நீ

இரத்தத்தால் உள்ளம் கழுவி 

சத்திய ஆடை தரித்து 

கர்த்தரைச் சந்தி வா

bottom of page