top of page

177. மெய் பக்தர் தாசர்

மெய் பக்தர் தாசரே 

கொண்டாட கூடுவோம்; 

சந்தோஷ கீதம் பாடியே 

கர்த்தாவை போற்றுவோம் 


மா உன்னத சீயோன் 

சோமசுந்தர சீயோன் 

மா உன்னத திவ்விய சீயோன் 

நாம் நோக்கியே செல்லுகிறோம்


ரட்சண்யக் கூட்டத்தார், 

பேரீவுக்காகவே 

மென்மேலும் நன்றி சொல்வார் 

பாடாமல் தீராதே  


பேரன்பின் வாரியில் 

நாம் மூழ்கி அழ்கிறோம்; 

பின், மோட்சானந்த வீட்டினில் 

ஒன்றாகப் பூரிப்போம்.


விசாரம், துக்கத்தை 

விட்டார வாரிப்போம்; 

இம்மானுவேலின் தேசத்தை, 

நாம்  நாடி போகிறோம்

bottom of page