top of page

188. கோடாகோடி ஸ்தோத்திரம்

கோடாகோடி ஸ்தோத்திரம் பாடி

கிறிஸ்துவின் அன்பை ருசிப்போமே


சேற்றிலிருந்து தூக்கி எடுத்துத்

தேற்றி அணைத்துக் காத்துக்கொண்டாரே - தேவசுதன்


பாவியை மீட்கப் பரன் சித்தங்கொண்டார்

பரலோகம் துறந்து பாரினில் பிறந்தார்

பரமனிவ் வேழையைத் தேடிவந்தாரே

பாதம் பணிந்தேன், பதில் 

ஏதுமுண்டோ? பூவுலகில்

- கோடாகோடி ஸ்தோத்திரம் பாடி


தேவனின் சித்தம் செய்யும் படியாய்

தாசனின் கோலம் தாமெடுத் தணிந்து

தற்பரன் நொறுக்கச் சித்தங் கொண்டாலும்

தம்மைப் பலியாய் தத்தம் செய்தாரே 

எந்தனுக்காய்

- கோடாகோடி ஸ்தோத்திரம் பாடி


ஆடுகளுக்காய் உயிர்தனைக் கொடுத்து

கேடுவராது காக்கும் நம் மேய்ப்பர்

இன்று மென்மேலே வைத்த நேசத்தால்

என்றென்றும் நன்றி கூறித்துதிப்பேன்

இறையவனை

- கோடாகோடி ஸ்தோத்திரம் பாடி


தாவீது கோத்திர சிங்கமாய் வந்தும்

சாந்தத்தால் என்னைக் கவர்ந்து கொண்டாரே

தாழ்மையான ஆட்டுக் குட்டியுடனே

தங்கியிருப்பேன் சீயோன் மலையில் 

நித்தியமாய்

- கோடாகோடி ஸ்தோத்திரம் பாடி


குயவனின் கையில் களி மண்ணைப்போல

குருவே நீர் என்னை உருவாக்குமையா

மாசற்ற மணவாட்டியாய் என்னைக்

காத்துக்கொள்ளும்படி கருணைகூர் ஐயா 

ஏழையென்னை

- கோடாகோடி ஸ்தோத்திரம் பாடி

bottom of page