188. கோடாகோடி ஸ்தோத்திரம்
கோடாகோடி ஸ்தோத்திரம் பாடி
கிறிஸ்துவின் அன்பை ருசிப்போமே
சேற்றிலிருந்து தூக்கி எடுத்துத்
தேற்றி அணைத்துக் காத்துக்கொண்டாரே - தேவசுதன்
பாவியை மீட்கப் பரன் சித்தங்கொண்டார்
பரலோகம் துறந்து பாரினில் பிறந்தார்
பரமனிவ் வேழையைத் தேடிவந்தாரே
பாதம் பணிந்தேன், பதில்
ஏதுமுண்டோ? பூவுலகில்
- கோடாகோடி ஸ்தோத்திரம் பாடி
தேவனின் சித்தம் செய்யும் படியாய்
தாசனின் கோலம் தாமெடுத் தணிந்து
தற்பரன் நொறுக்கச் சித்தங் கொண்டாலும்
தம்மைப் பலியாய் தத்தம் செய்தாரே
எந்தனுக்காய்
- கோடாகோடி ஸ்தோத்திரம் பாடி
ஆடுகளுக்காய் உயிர்தனைக் கொடுத்து
கேடுவராது காக்கும் நம் மேய்ப்பர்
இன்று மென்மேலே வைத்த நேசத்தால்
என்றென்றும் நன்றி கூறித்துதிப்பேன்
இறையவனை
- கோடாகோடி ஸ்தோத்திரம் பாடி
தாவீது கோத்திர சிங்கமாய் வந்தும்
சாந்தத்தால் என்னைக் கவர்ந்து கொண்டாரே
தாழ்மையான ஆட்டுக் குட்டியுடனே
தங்கியிருப்பேன் சீயோன் மலையில்
நித்தியமாய்
- கோடாகோடி ஸ்தோத்திரம் பாடி
குயவனின் கையில் களி மண்ணைப்போல
குருவே நீர் என்னை உருவாக்குமையா
மாசற்ற மணவாட்டியாய் என்னைக்
காத்துக்கொள்ளும்படி கருணைகூர் ஐயா
ஏழையென்னை
- கோடாகோடி ஸ்தோத்திரம் பாடி