top of page

194. எந்தன் நாவில் புதுபாட்டு

எந்தன் நாவில் புதுபாட்டு

எந்தன் இயேசு தருகிறார்


ஆனந்தம் கொள்ளுவேன்

அவரை நான் பாடுவேன் -உயிருள்ள

நாள் வரையில் அல்லேலூயா


பாவ இருள் என்னை வந்து

சூழ்ந்து கொள்கையில் -தேவனவர்

தீபமாய் என்னை தேற்றினார்

- ஆனந்தம் கொள்ளுவேன்


வாதை நோயும் வந்தபோது

வேண்டல் கேட்டிட்டார் -பாதை காட்டி

துன்பமெல்லாம் நீக்கிமீட்டிட்டார்

- ஆனந்தம் கொள்ளுவேன்


சேற்றில் வீழ்ந்த என்னையவர்

தூக்கியெடுத்தார் -நாற்றமெல்லாம்

ஜீவ இரத்தம் கொண்டு மாற்றினார்

- ஆனந்தம் கொள்ளுவேன்


இவ்வுலக பாடு என்னை

என்னை செய்திடும் -அவ்வுலக

வாழ்க்கைக் காண காத்திருக்கிறேன்

- ஆனந்தம் கொள்ளுவேன்


தந்தை தாயும் நண்பர் உற்றார்

யாவுமாயினார் – நிந்தை தாங்கி

எங்குமவர் மேன்மை சொல்லுவேன்

- ஆனந்தம் கொள்ளுவேன்

bottom of page