top of page

2. ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே

ஊற்றுத் தண்ணீரே! 

எந்தன் தேவ ஆவியே 

ஜீவ நதியே என்னில் 

பொங்கிப் பொங்கிவா (2) 


ஆசீர்வதியும் என் நேசக் கர்த்தரே (2)

ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும் (2)

- ஊற்றுத் தண்ணீரே! 


கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலே 

கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே 

பள்ளத்தாக்கிலும் மலைகளிலும் 

தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே

- ஊற்றுத் தண்ணீரே! 


ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தாவே 

ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுமே 

கனி தந்திட நான் செழித்தோங்கிட 

கர்த்தரின் கரத்தால் நித்தம் கனம் பெற்றிட

- ஊற்றுத் தண்ணீரே! 


இரட்சிப்பின் ஊற்றுக்கள் என்றன் சபைதனிலே 

எழும்பிட இந்த வேளை இறங்கிடுமே 

ஆத்ம பலமும் பரிசுத்தமும் 

ஆவலுடன் பெற்றிடவே வரம் தாருமே 

- ஊற்றுத் தண்ணீரே! 


திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலே 

இரட்சகரின் காயங்களில் வெளிப்படுதே 

பாவக்கறைகள் முற்றும் நீங்கிட 

பரிசுத்தர் சமுகத்தில் ஜெயம் பெற்றிட

- ஊற்றுத் தண்ணீரே! 

bottom of page