2. ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
ஊற்றுத் தண்ணீரே!
எந்தன் தேவ ஆவியே
ஜீவ நதியே என்னில்
பொங்கிப் பொங்கிவா (2)
ஆசீர்வதியும் என் நேசக் கர்த்தரே (2)
ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும் (2)
- ஊற்றுத் தண்ணீரே!
கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலே
கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே
பள்ளத்தாக்கிலும் மலைகளிலும்
தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே
- ஊற்றுத் தண்ணீரே!
ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தாவே
ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுமே
கனி தந்திட நான் செழித்தோங்கிட
கர்த்தரின் கரத்தால் நித்தம் கனம் பெற்றிட
- ஊற்றுத் தண்ணீரே!
இரட்சிப்பின் ஊற்றுக்கள் என்றன் சபைதனிலே
எழும்பிட இந்த வேளை இறங்கிடுமே
ஆத்ம பலமும் பரிசுத்தமும்
ஆவலுடன் பெற்றிடவே வரம் தாருமே
- ஊற்றுத் தண்ணீரே!
திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலே
இரட்சகரின் காயங்களில் வெளிப்படுதே
பாவக்கறைகள் முற்றும் நீங்கிட
பரிசுத்தர் சமுகத்தில் ஜெயம் பெற்றிட
- ஊற்றுத் தண்ணீரே!