top of page

204. எனக்காய் ஜீவன் விட்டவரே

எனக்காய் ஜீவன் விட்டவரே

என்னோடிருக்க எழுந்தவரே

என்னை என்றும் வழி நடத்துவாரே 

என்னை சந்திக்க வந்திடுவாரே


இயேசு போதுமே

இயேசு போதுமே

எந்த நாளிலுமே என் நிலையிலுமே

எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே


மனிதர் என்னை கைவிட்டாலும்

மாமிசம் அழுகி நாறிட்டாலும்

ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும்

ஆகாதவன் என்று தள்ளி விட்டாலும்

- இயேசு போதுமே


புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்

அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்

ஆத்துமாவை தினம் தேற்றிடுவார்

ஆனந்தத்தால் என்றும் நிறைத்திடுவார்

- இயேசு போதுமே


பிசாசின் சோதனை பெருகிட்டாலும்

சோர்ந்து போகாமல் முன்செல்லவே

உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும்

மயங்கிடாமல் முன் செல்லவே

- இயேசு போதுமே

bottom of page