top of page

234. அதோ ஓர் ஜீவ வாசல் பார்!

அதோ ஓர் ஜீவ வாசல் பார்!

அவ்வாசலில் ஓர் ஜோதி;

பேரொளியாய் பிரகாசிப்பார்,

மங்காத அருள் ஜோதி


ஆ! ஆழ்ந்த அன்பு இதுவே!

அவ்வாசல் திறவுண்டதே,

பாரேன்! பாரேன்!

பார் திறவுண்டதே


இவ்வழி உட்பிரவேசிப்பார்

கண்டடைவார் பேர் வாழ்வும்

தாழ்வோர், மேலோர், இல்லோர், உள்ளோர்

எவ்வர்ண தேசத்தாரும்


அஞ்சாமல் அண்டி சேருவோம்;

அவ்வாசலில் உட்செல்வோம்;

எப்பாவம் துன்பம் நீங்கிப்போம்

கர்த்தாவை துதி செய்வோம்


bottom of page