top of page

25. கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்

கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்,

கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்,

கைவிடா காத்திடும் பரமனின்

கரங்களை நாம் பற்றி கொள்வோம்.


ஜீவ தேவன் பின் செல்லுவோம்,

ஜீவ ஒளிதனைக் கண்டடைவோம்

மனதின் காரிருள் நீங்கிடவே

மா சமாதானம் தங்கும்

- கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்


உண்மை வழி நடத்திடும்

உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை

கண்கள் அவன் மீது வைத்திடுவார்

கருத்தாய் காத்திடுவார்

- கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்


அன்புமிகும் அண்ணலிவர்

அருமை இயேசுவை நெருங்குவோம்

தம்மண்டை வந்தோரைத் தள்ளிடாரே

தாங்கி அணைத்திடுவார்

- கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்


இம்மைக்கேற்ற இன்பங்களை 

நம்மை விட்டே முற்றும் அகற்றுவோம் 

மாறாத சந்தோஷம் தேடிடுவோம் 

மறுமை இராஜ்ஜியத்தில் 

- கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்

bottom of page