top of page

27. நான் யோர்தான் கரையில் நின்று

நான் யோர்தான் கரையில் நின்று 

கானானின் காட்சியை 

விழித்து நின்று நோக்கினேன் 

அங்கே என் பொக்கிஷம் 


இளைப்பாறுவோம், எழில் ராஜ்யத்தில் 

சற்றுதூரத்தில் பசும் காட்சிகளை 

நாம் அனைவரும் கண்டு சுகித்திடுவோம் 

மோசேயின் கீதம் பாடுவோம் 


பரந்த சமவெளியில் 

நிதியம் ஜொலிக்குதே 

கிறீஸ்து அரசாள்கிறார் 

இராக்காலம் சென்று போயிற்றே 


நான் அந்த மேலோகத்திற்கு 

எப்போ போய்ச சேருவேன்?

என் பிதாவின் முகத்தினை 

தரிசித்திடுவேன் 


நான் ஆத்ம மகிழிச்சியினால் 

பூமியில் தங்கிட்டேன் 

யோர்தான் அலை புரண்டாலும் 

அஞ்சாமல் சொல்லுவேன் 

bottom of page