top of page

279. பதிலுண்டா? பதிலுண்டா?

பதிலுண்டா? பதிலுண்டா?

ஜெபித்த உனக்கு பதில் உண்டா? 


பதில் வரா ஜெபம் உண்டானால்

பதறாதே, பதிலுண்டுனக்கு.


அழுது ஜெபித்த உன் ஜெபத்தை

ஆண்டவர் அலட்சியம் செய்யார்;

நம்பிக்கையற்று நடுங்காதே;

நாளும் பொழுதில் பதில் தருவார்.


பாதையில் பதிந்த விசுவாசம்

பயனற் றென்றும் போகாதே;

அடிக்கும் புசல்கள் அணைத்தாலும்

அது ஒரு நாளும் அணையாதே.


கானான் பார்க்க ஆசித்து

கோனான் மோசே கெஞ்சினத்தால்;

பூமான் இயேசு மா மலையில்

பூர்த்தியாய் அளித்தார் எந்நாளும்.


பவுலாம் நல்ல அப்போஸ்தலர்

பரிந்து கெஞ்சினார் குறை நீங்க;

கிறிஸ்து பகவான் கீர்த்தி பெற

கிருபை அளித்தார் எந்நாளுமே. 

bottom of page