top of page

292. திருக்கரத்தால் தாங்கி

திருக்கரத்தால் தாங்கி என்னை

திரு சித்தம் போல் நடத்திடுமே

குயவன் கையில் களிமண் நான்

அனுதினம் நீர் வனைந்திடுமே - (2)


உம் வசனம் தியானிக்கையில்

இதயமதில் ஆறுதலே

காரிருளில் நடக்கையிலே

தீபமாக வழிநடத்தும் - (2)


ஆழ்கடலில் அலைகளினால்

அசையும்போது என் படகில்

ஆத்ம நண்பர் இயேசு உண்டே

சேர்ந்திடுவேன் அவர் சமூகம் - (2)


அவர் நமக்காய் ஜீவன் தந்து

அளித்தனரே இந்த மீட்பு

கண்களினால் காண்கின்றேனே

இன்ப காணான் தேசமதே - (2)

bottom of page