top of page
36. தாமதம் இன்றி ஏசுவைச் சேர்
தாமதம் இன்றி ஏசுவைச் சேர்,
வேதத்தில் காட்டும் வழியே நேர்,
நம்மிடம் வந்தா ரென்பதைத் தேர்,
வா வென்னுஞ் சொல்லைக் கேள்
சேர்வோம், பார்ப்போம் களிப்புடனே;
சுத்தஞ்செய்த நெஞ்சருடனே,
என்றென்றைக்கும் ஏசுவுடனே,
வாழ்வோம், சீர் அடைவோம்.
வா என்கிறார், வேண்டாம் என்னாதே
பேரின்பணந்தம் இகழாதே,
ஏசுவோடமர், ஆத்துமாவே;
போக்குச் சொல்லாதிரும்
இவ்விடம் வந்த ஏசுவைப் பார்,
மீட்பின் காரணர் மார்பிலே சார்;
தயவாய் உன்னை வா வென்கிறார்,
தடை செய்யாதிரு.
bottom of page