top of page

36. தாமதம் இன்றி ஏசுவைச் சேர்

தாமதம் இன்றி ஏசுவைச் சேர்,

வேதத்தில் காட்டும் வழியே நேர்,

நம்மிடம் வந்தா ரென்பதைத் தேர்,

வா வென்னுஞ் சொல்லைக் கேள் 


சேர்வோம், பார்ப்போம் களிப்புடனே;

சுத்தஞ்செய்த நெஞ்சருடனே,

என்றென்றைக்கும் ஏசுவுடனே, 

வாழ்வோம், சீர் அடைவோம்.


வா என்கிறார், வேண்டாம் என்னாதே 

பேரின்பணந்தம் இகழாதே, 

ஏசுவோடமர், ஆத்துமாவே;

போக்குச் சொல்லாதிரும் 


இவ்விடம் வந்த ஏசுவைப் பார்,

மீட்பின் காரணர் மார்பிலே சார்;

தயவாய் உன்னை வா வென்கிறார்,

தடை செய்யாதிரு.

bottom of page