top of page

39. பாவத்தின் பலன் மரணம்

பாவத்தின் பலன் மரணம், 

ஓ பாவி, நடுங்கிடாயோ?

கண் காண்பதெல்லாம் அழியும்; 

காணாத தல்லோ நித்தியம்


இயேசு ராஜா வருவார்,

இன்னுங் கொஞ்ச காலந்தான்;

மோட்சலோகம் சேர்ந்திடுவோம்


உலக இன்பம் நம்பாதே, 

துர் இச்சை யாவும் ஒழியும்;

உன் ஜீவன் போகும் நாளிலே, 

ஓர் காசும் கூட வராதே.

- அல்லேலூயா ! இயேசு ராஜா வருவார்


உன் காலமெல்லாம் போகுதே, 

உலக மாய்கையிலே,

ஓ! தேவ கோபம் வருமுன், 

உன் மீட்பரண்டை வாராயோ?

- அல்லேலூயா ! இயேசு ராஜா வருவார்


தேவன்பின் வெள்ளம் ஓடுதே, 

கல்வாரி மலைதனிலே,

உன் பாவம் யாவும் நீங்கிப் போம்;

அதில் ஸ்நானம் செய்வதாலே.

- அல்லேலூயா ! இயேசு ராஜா வருவார்


மாபாவியான என்னையும், 

என் நேசர் ஏற்றுக் கொண்டாரே;

ஒ! பாவி நீயும் ஓடி வா, 

தேவாசீர்வாதம் பெறுவாய்

- அல்லேலூயா ! இயேசு ராஜா வருவார்

bottom of page