top of page

42. வரும் பாவியை ஒரு போதிலும்

வரும் பாவியை ஒரு போதிலும்

வெறுக்கார் கிறிஸ் தேசு

திருவானவர் அருளால் உன்றன் 

கறை நீங்கிட மீட்பார்


பாவி உன்றன் மீட்பரண்டைத் 

தாவி ஓடி வருவாய்;

கூவி அவர் பாதம் வந்து

மேவி மீட்பைப் பெறுவாய்


நாடி வரும் பாவிகளை

'ஓடு' என்று முடுக்கார்;

பாடி மகிழ் கொள்ள உள்ளம் 

மாறுதலை அளிப்பார்


உன்றன் நீதி யாவும் மெய்யாய்க் 

கந்தை என்று உணர்வாய் 

என்றன் இயேசு மீட்பர் பாதம்

வந்து மனம் மாறு 

bottom of page