top of page
6. போற்றுவேன் என் மீட்பர் அன்பை
போற்றுவேன் என் மீட்பர் அன்பை!
பிராணன் தந்து ரட்சித்தார்
பாடு பட்டு, ரத்தம் சிந்தி,
பாவம், சாபம் நீக்கினார்!
போற்றும்! போற்றும்!! போற்றும்!!! அல்லேலூயா!
பூர்ண மீட்புண்டாக்கினார்
தூய வல்ல ரத்தம் சிந்தி
தீய பாவம் நீக்கினார்
நீசப் பாவி என்றன் பேரில்
நேசம் வைத்துக் காட்டினார்
மீட்கும் பொருளாக தம்மை
முற்றும் தந்திடேற்றினார்
போற்றுவேன் சம்பூரண மீட்பை!
நேச நாதர் காக்கிறார்
வாழ்நாளெல்லாம் பாவத்தின் மேல்
வெற்றி காண செய்கிறார்!
போற்றுவேன் ஆனந்தமாகப்
பாடி நன்றி சொல்லுவேன்
என்னை மீட்ட ஏசுவோடே
என்றும் தங்கி, சேவிப்பேன்.
bottom of page