top of page
64. கொஞ்ச காலம் இயேசுவுக்காக
கொஞ்ச காலம் இயேசுவுக்காக
கஷ்டப்பாடு சகிப்பதினால்
என்றன் துன்பம் இன்பமாய் மாறும்
இயேசுவை நான் காணும் போது
அவர் பாதம் வீழ்ந்து பணிவேன்.
ஆனந்தக் கண்ணீர் வடிப்பேன்.
என்றன் ஓட்டம் ஜெபத்துடன் முடியும்
அந்த நாடு சுதந்தரிப்பேன்
கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை
கடந்தென்று நான் மறைவேன்.
ஜீவ ஊற்றருகே என்னைக் கூட்டிச் சென்று
தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார்.
இந்த தேகம் அழியும் கூடாரம்
இதை நம்பி யார் பிழைப்பார்?
என் பிதா வீட்டில் வாசஸ்தலங்களுண்டு
நான் இயேசுவோடு குடியிருப்பேன்.
bottom of page