top of page

66. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்

என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!

அப்போதென் துக்கம் மறப்பேன்,

பிதாவின் பாதம் பணிவேன்,

என் ஆசை யாவும் சொல்லுவேன்;

என் நோவு வேளை தேற்றினார்,

என் ஆத்ம பாரம் நீக்கினார்,

ஒத்தாசை பெற்றுத் தேறினேன்;

பிசாசை வென்று ஜெயித்தேன்.


என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!

மா தாழ்மையோடு பிரார்த்திப்பேன்!

மன்றாட்டைக் கேட்போர் வருவார்

பேர் ஆசீர்வாதம் தருவார்;

என் வாக்கின் மேல் விஸ்வாசமாய்,

என் பாதம் தேடு ஊக்கமாய்,

என்றோர்க்கென் நோவைச் சொல்லுவேன்;

இவ்வேளையை நான் வாஞ்சிப்பேன்.


என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!

ஆனந்த களிப் படைவேன்,

பிஸ்காவின் மேலே ஏறுவேன்,

என் மோட்ச வீட்டை நோக்குவேன்;

இத்தேகம் மாறி ஏகுவேன்,

விண் நித்திய வாழ்வைப் பெறுவேன்,

பேரின்ப வீட்டில் வசிப்பேன்,

வாடாத க்ரீடம் சூடுவேன்.

bottom of page