top of page

74. என்றன் ஜெபவேளை

எந்தன் ஜெபவேளை

உமைத்தேடி வந்தேன்

தேவா பதில் தாருமே

எந்தன் கோட்டை, எந்தன் தஞ்சம் நீரே

உம்மை நான் நாடி வந்தேன்.


சோராது ஜெபித்திட

ஜெப ஆவி வரம் தாருமே

தடையாவும் அகற்றிடுமே

தயை கிறிஸ்து கேட்டு உம்பாதம் வந்தேன். 


உம்மோடு எந்நாளும்

உறவாட அருள் செய்யுமே

கர்த்தாவே உம் வார்த்தையைக்

கேட்டிட காத்திருப்பேனே.


நம்பிக்கை இல்லாமல்

அழிந்திடும் மாந்தர்களை,

மீட்டிடும் என் இயேசுவே,

போராடி ஜெபிக்கின்றேன் நாதா.

bottom of page