top of page

75. நியாயத் தீர்ப்பில்

நியாயத் தீர்ப்பில் உமதண்டை 

நிற்கும் போது ரட்சகா 

உதவாமல் பலனற்று 

வெட்கப்பட்டு போவேனோ?


ஆத்மா ஒன்றும் ரட்சிக்காமல் 

வெட்கத்தோடே ஆண்டவா !

வெறுங்கையனாக உம்மைக் 

கண்டு கொள்ளல் ஆகுமா?


ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை 

வைத்திராமல் சோம்பலாய் 

காலம் கழித்தோர் அந்நாளில் 

துக்கிப்பார் நிர்பந்தராய் 


தேவரீர் கைதாங்க, சற்றும் 

சாவுக் கஞ்சிக் கலங்கேன்;

ஆயினும் நான் பலன் காண 

உழைக்காமல் போயினேன் 


வாழ்நாள் எல்லாம் வீணாளாக

சென்று போயிற்றே! ஐயோ!

மோசம் போனேன்! விட்ட நன்மை 

அழுதாலும் வருமோ?


பக்தரே! உற்சாகத்தோடு 

எழும்பி ப்ரகாசிப்பீர்!

ஆத்துமாக்கள் ஏசுவண்டை 

வந்து சேர உழைப்பீர்!

bottom of page