84. ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே
ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே
அருமையாய் இயேசு நமக்களித்த
அளவில்லாக் கிருபை பெரிதல்லவோ
அனுதின ஜீவியத்தில்
ஆத்துமமே, என் முழு உள்ளமே!
உன் அற்புத தேவனையே ஸ்தோத்திரி,
பொங்கிடுதே என் உள்ளத்திலே
பேரன்பின் பெருவெள்ளமே.
கருணையாய் இதுவரை கைவிடாமலே
கண்மணி போல் எமைக் காத்தாரே
கவலைகள் போக்கி
கண்ணீர் துடைத்தார்
கருத்துடன் பாடிடுவோம்
- ஆத்துமமே, என் முழு உள்ளமே!
படகிலே படுத்து உறங்கினாலும்
கடும்புயல் அடித்துக் கவிழ்த்தினாலும்
கடலையுங் காற்றையும் அமர்த்தி எமைக்
காப்பாரே அல்லேலூயா
- ஆத்துமமே, என் முழு உள்ளமே!
யோர்தானைக் கடப்போம்
அவர் பெலத்தால்,
எரிகோவைத் தகர்ப்போம்
அவர் துதியால்,
இயேசுவின் நாமத்தில் ஜெயம் எடுத்தே
என்றென்றுமாய் வாழ்வோம்
- ஆத்துமமே, என் முழு உள்ளமே!
பரிசுத்தவான்களின் பாடுகளெல்லாம்
அதி சீக்கிரமாய் முடிகிறதே.
விழிப்புடன் கூடித் தரித்திருப்போம்
விரைந்தவர் வந்திடுவார்
- ஆத்துமமே, என் முழு உள்ளமே!