top of page
87. பாவத்தின் பாரத்தினால்
பாவத்தின் பாரத்தினால்
தவித்திடும் பாவி என்னை,
நின் கிருபை பிரவாகத்தால்
தேற்றிடும், ஏசு நாதா.
கெட்ட குமாரனைப் போல்
துஷ்டனாய் அலைந்தேனப்பா
நின் அன்பை உணராமல்
துரோகம் நான் செய்தேனப்பா.
தந்தையை விட்ட பின்பு
தவிடுதான் ஆகாரமோ?
மனம் கசிந்து நொந்தேன் நான்,
கண்ணீரைத் துடைத்திடுமே.
கள்ளனே ஆயினும் நான்
நீர் பெற்ற பிள்ளையல்லோ?
கள்ளனுக்கருள் செய்த நீ
தள்ளாத சிலுவை நாதா.
தாய் தந்தை தமர்கள் எல்லாம்
என்னைக் கைவிடுவார்களே
நீர் என்னைத் தாங்கிடுவீர்
நீரல்லால் யாருமில்லை.
bottom of page