top of page

88. அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே

அந்தோ கல்வாரியில் - அருமை இரட்சகரே

சிறுமை அடைந்தே தொங்குறார்


மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்

கொடுமை குருசை தெரிந்தெடுத்தாரே

மாயலோகத்தோடழியாது யான்

தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே

- அந்தோ கல்வாரியில்


அழகுமில்லை சௌந்தரியமில்லை

அந்தக் கேடுற்றார் என்றனை மீட்க,

பல நிந்தைகள் சுமந்தாலுமே

பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே

- அந்தோ கல்வாரியில்


முள்ளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்

கால்கரங்களில் ஆணிகள் பாய்ந்தும்

குருதி வடிந்தவர் தொங்குறார்

வருந்தி மடிவோரையும் மீட்டிடவே

- அந்தோ கல்வாரியில்


அதிசயம் இது இயேசுவின் தியாகம்

அதிலும் இன்பம் அன்பரின் தியானம்

அதை எண்ணியே நிதம் வாழுவேன்

அவர் பாதையே நான் தொடர்ந்தேகிடவே

- அந்தோ கல்வாரியில்


சிலுவை காட்சியைக் கண்டு முன்னேறி

சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே

என்னைச் சேர்ந்திட வருவேனென்றார்

என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன்

- அந்தோ கல்வாரியில்

bottom of page