top of page
88. அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே
அந்தோ கல்வாரியில் - அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்குறார்
மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
கொடுமை குருசை தெரிந்தெடுத்தாரே
மாயலோகத்தோடழியாது யான்
தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே
- அந்தோ கல்வாரியில்
அழகுமில்லை சௌந்தரியமில்லை
அந்தக் கேடுற்றார் என்றனை மீட்க,
பல நிந்தைகள் சுமந்தாலுமே
பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே
- அந்தோ கல்வாரியில்
முள்ளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்
கால்கரங்களில் ஆணிகள் பாய்ந்தும்
குருதி வடிந்தவர் தொங்குறார்
வருந்தி மடிவோரையும் மீட்டிடவே
- அந்தோ கல்வாரியில்
அதிசயம் இது இயேசுவின் தியாகம்
அதிலும் இன்பம் அன்பரின் தியானம்
அதை எண்ணியே நிதம் வாழுவேன்
அவர் பாதையே நான் தொடர்ந்தேகிடவே
- அந்தோ கல்வாரியில்
சிலுவை காட்சியைக் கண்டு முன்னேறி
சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே
என்னைச் சேர்ந்திட வருவேனென்றார்
என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன்
- அந்தோ கல்வாரியில்
bottom of page