top of page
89. ஏசு என் வழி நடத்த
ஏசு என் வழி நடத்த
வேறு ஏதும் வேண்டுமா?
சென்ற நாள் க்ருபையால் ஆண்ட
அவரில் சந்தேகமா?
தேவ சமாதானம் ஆறுதல்
இங்கவரில் தங்கவே;
என்ன நேரிட்டாலும் ஸ்தோத்திரம்
ஏசின் செயல் நன்மையே
ஏசு என் வழி நடத்திச்
சூழிலிலும் தேற்றுறார்;
சோதனையில் க்ருபை தந்து
ஜீவாப்பம் போஷிக்கிறார்
என் அடி தள்ளாடினாலும்
என் ஆத்ம தவிக்கினும்
பொங்குதே சந்தோஷ ஊற்று
இதோ! கன்மலை நின்றும்
ஏசு என் வழி நடத்த
என்ன பூர்ண பேரன்பு!
வாக்கு சம்பூரண ஆற்தல்
என் பிதா வீட்டில் உண்டு
என் ஆத்மா சாவாமை
போர்த்து இலங்கும் ராஜ்யம் சேர
இதோ என்றன் நித்ய கீதம்
"வழியெல்லாம் ஏசுவே"
bottom of page