top of page

97. வான பிதா தந்த வேத

வான பிதா தந்த வேதத்திலே

நான் மகிழ்வேன் அன்பு சொல்லுகிறார்;

இவ்வித ஆச்சர்யம் யாவினுள்ளே

ஆச்சர்யம் ஏசென்னை நேசிக்கிறார்.

             

ஆனந்தம் ஏசு நேசிக்கிறார்!

நேசிக்கிறார்! நேசிக்கிறார்!

ஆனந்தம்! ஏசு நேசிக்கிறார்!

நேசிக்கிறார் என்னையும்.


நான் மறந்தோடினும் நேசித் தென்னை

சென்ற இடம் வந்து தேடுகிறார்;

மீண்டும் நினைத்தவர் நேசந்தன்னை

ஆண்டவர் அண்டுவேன், நேசிக்கிறார்.


மா ராஜர் வானுயர் தோற்றத்திலே

கீதம் இதே என்றும் பாடிக் கொள்வேன்;

என் துதி நித்திய காலத்திலே

ஆச்சர்யம், ஏசென்னை நேசிக்கிறார்.         


நேசிக்கிறார், நானும் நேசிக்கிறேன்

மீட்க வந்தாத்துமம் நேசிக்கிறார்;

சாவு மரத்தில் அந்நேசங் கண்டேன்;

நிச்சயம் ஏசென்னை நேசிக்கிறார்.

bottom of page