99. தந்தானைத் துதிப்போமே
தந்தானைத் துதிப்போமே – திருச்
சபையாரே கவிப் – பாடிப்பாடி
விந்தையாய் நமக்கனந்த னந்தமான
விள்ளற்கரியதோர் நன்மை மிக மிக
தந்தானைத் துதிப்போமே
ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து
ஐயன் ஏசுவுக்குன் கையைக் கூப்பித்துதி
செய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும்
- தந்தானைத் துதிப்போமே
கண்ணாரக் களித்தாயே – நன்மைக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து
கண்ணாரக் களித்தாயே
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமுன் மேல் சோனா மாரிபோல் பெய்துமே
- தந்தானைத் துதிப்போமே
சுத்தாங்கத்து நற்சபையே – உனை
முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து
சத்துக் குலைந்துனை சக்தியாக்கத் தம்மின்
ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம்
- தந்தானைத் துதிப்போமே
தூரம் திரிந்த சீயோனே – உனை
தூக்கியெடுத்து கரத்தினிலேந்தி
ஆரங்கள் பூட்டி அலங்கரித்து உனை
அத்தந் மணவாட்டியாகக்கினது என்னை
- தந்தானைத் துதிப்போமே
சிங்காரக் கன்னிமாரே – உம்
அலங்காரக் கும்மி அடித்துப் படித்து
மங்காத உன் மணவாளன் ஏசுதமை
வாழ்த்தி வாழ்த்தி ஏத்தி பணிந்திடும்
- தந்தானைத் துதிப்போமே