top of page

99. தந்தானைத் துதிப்போமே

தந்தானைத் துதிப்போமே – திருச்

சபையாரே கவிப்  – பாடிப்பாடி


விந்தையாய் நமக்கனந்த னந்தமான

விள்ளற்கரியதோர் நன்மை மிக மிக

தந்தானைத் துதிப்போமே


ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்

மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து

ஐயன் ஏசுவுக்குன் கையைக் கூப்பித்துதி

செய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும்

- தந்தானைத் துதிப்போமே


கண்ணாரக் களித்தாயே – நன்மைக்

காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து

கண்ணாரக் களித்தாயே

எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை

இன்னுமுன் மேல் சோனா மாரிபோல் பெய்துமே

- தந்தானைத் துதிப்போமே


சுத்தாங்கத்து நற்சபையே – உனை

முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து

சத்துக் குலைந்துனை சக்தியாக்கத் தம்மின்

ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம்

- தந்தானைத் துதிப்போமே


தூரம் திரிந்த சீயோனே – உனை

தூக்கியெடுத்து கரத்தினிலேந்தி

ஆரங்கள் பூட்டி அலங்கரித்து உனை

அத்தந் மணவாட்டியாகக்கினது என்னை

- தந்தானைத் துதிப்போமே


சிங்காரக் கன்னிமாரே – உம்

அலங்காரக் கும்மி அடித்துப் படித்து

மங்காத உன் மணவாளன் ஏசுதமை

வாழ்த்தி வாழ்த்தி ஏத்தி பணிந்திடும்

- தந்தானைத் துதிப்போமே

bottom of page